குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

ஆய்வுக்கூடத்தில் அறிவை வளர்க்கலாம், மூளையை வளர்க்க?



                 “என்ன ? வீட்ல நாய் பூன வளர்க்கர மாதிரி மூளைய வளர்க்கறத பத்தி பேசுறேள்...உங்க மூளைல எதாவது களண்டடுத்தா?”, என்று பக்கத்து வீட்டு மாமி, இந்த கட்டுரையின் தலைப்பை பார்த்து கேள்வி எழுப்பலாம். ஆனால், இது கற்பனை கதையோ, ஏதோ களண்டதனால் ஏற்பட்ட உளரலோ இல்லை. சில நாட்களுக்கு முன், ‘இயற்கை’ ( Nature ) பத்திரிக்கையில் .வெளியான, ஓர் ஆய்வுத்தாள் பற்றிய செய்தியே இது.

ஆஸ்த்திரிய ( Austria ) நாட்டில், அறிவியல் கழகத்தில் ( Academy of Sciences ) உள்ள மூலக்கூற்று உயிரியல் நிலையத்தைச் ( Institute of Molecular Biology ) சேர்ந்த விஞ்ஞானிகள், ஒன்பது-வார மனித கருவில் வளரும் மூளையோடு பல ஒற்றுமைகள் கொண்ட, சில மில்லீ மீட்டர்கள் மட்டுமே அளவுடைய ஓர் மூளைப் போன்று உருப்பை, மனித கருவின் குருத்தணுக்களை உபயோகித்து ஆய்வு கூடத்தில் வளர்த்துள்ளனர்.

மனித மூளையானது, நாம் எத்தனயோ ஆச்சர்யமூட்டும் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் படைத்தாலும், அவறிற்கெல்லாம் பன்மடங்கு நவீனமும், அசாதாரணமும் வாய்ந்த்தாகும். அத்தகைய உருப்பு தாயின் வயிற்றில் உருவாகும் முறையை அறிவதற்கு இந்த ஆய்வு ஒரு படிக்கல்லாகும். ஆனாலும், கூடத்தில் வளர்க்கப்பட்ட உருப்போ, உண்மையான மனித கருவில் வளரும் மூளையைக் காட்டிலும் பல வகையில் பின்தங்கியது. உதாரணமாக, ஒன்பது வாரம் வளர்ச்சியடைந்த மூளையின் அனைத்து அங்கங்களும் இதில் கிடையாது. மேலும், இரத்தக்குளாய்கள் இல்லாத்தால், இதனால் மேலும் வளர்ச்சியடையக் கூடிய சக்தியற்றது. ஆகையால், இதை மூளை என்று சொல்வதை விட, இந்த நிலையத்து விஞ்ஞானிகள் குறிப்பிட்டது போல், மூளைப்பொருளால் ஆன உருப்பு ( “Cerebral Organoid“ ) என்று அளைப்பதே தகுந்தது.


Source : B.B.C. 


விஞ்ஞானிகளின் இம்முயற்சியால் வளரும் மனித மூளையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள ஓர் இணையில்லா வாய்ப்பு அளிக்கிறது. அத்தகைய பாதிப்புகளும், அவற்றை குணமாக்க தயாரிக்கப் பட்ட மருந்துகளை சோதிப்பதற்கும், எலிகளின் மீது இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகள், பயனேதும் அளிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் நம் மூளையில் காணப்படும் பல பிரத்தியேக குணங்கள், எலிகளில் காணப்படுவதில்லை. எனவே தற்போது ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும் உருப்பில், இந்த மருந்துகளின் விளைவை கண்டறிந்து, மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட பாதிப்புகளை குணப்படுத்துவதற்கு ஓர் அரிய பாதையை அளித்துள்ளது என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பற்றி ஆங்கிலத்தில் படிக்க நீங்கள் விரும்பினால், ‘தி இந்து’ விலோ, பி.பி.சி. யிலோ.படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக