குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

கண்ணுக்கெட்டும் தூரத்தில் செவ்வாய்

"இந்த வாரம் செவ்வாய் வாரம்",  என்று கூட கூறலாம். பூமிக்கு மிக அருகில் வருவதால் இன்று ( ஏப்ரல் 08, 2014) தொடங்கி, மூன்று நாட்களுக்கு செவ்வாய் கிரகத்தைச் சித்திரை நட்சத்திரத்திற்கு அருகே காணலாம். கடந்த சில நாட்களாக பூமியின் சுற்றுப்பாதையும் , செவ்வாயின் சுற்றுப்பாதையும் நெருங்கி வந்த நிலையில், இந்த மூன்று நாட்களில் தெளிவாக செவ்வாய் தென்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு ஐந்தரை கோடி கி.மீ. தொலைவில் காணப்பட்ட செவ்வாய், தற்பொழுது 9.24 கோடி கி.மீ. தொலைவில் காணலாம். தூரம் அதிகமானாலும், இக்காட்சியை வெறுங்கண்ணால் காண முடியும் என்று பிர்லா கோளரங்கின் நிர்வாக இயக்குனர் திரு.ஐயம்பெருமாள் பத்திரிக்கையாளரிடம் கூறியுள்ளார்.  இந்த நிகழ்வையொட்டி வானவியலில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


நன்றி : 'தி ஹிந்து' நாளிதழ்


பூமி மற்றும் செவ்வாய் வெவ்வேறு வேகங்களில் சூரியனை சுற்றி வருவதாலும், செவ்வாயின் சுற்று பாதை அதீத நீள்வட்டவடிவம் (Highly eccentric elliptical orbit)) கொண்டதாலும், ஒவ்வொரு முறையும் பூமி அருகே செவ்வாய் வரும் பொழுது, சிறு வித்தியாசங்கள் இருக்கக்கூடும் என்பது ஓர் சிறப்பம்சம் ஆகும்.

பொதுமக்கள் செவ்வாய் கிரகத்தை காண்பதற்கு வசதியாக , ஏப்ரல் 8, 9, 10 ஆகிய நாட்களில் மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை, சென்னை பிர்லா கோளரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பற்றி மேலும் ஆங்கிலத்தில் படிக்க:
'தி ஹிந்து' நாளிதழ்
ஸ்பேஸ்.காம் வலைத்தளம்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

சனி கிரகத்தின் நிலவில் சமுத்திரம் ?

சனி கிரகத்தையும் அதன் பல்வேறு நிலவுகளையும் ஆய்வு செய்யும் நோக்கத்துடன், ஐரோப்ப, அமெரிக்க மற்றும் இத்தாலி விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் ஒன்றிணைந்த முயற்ச்சியால் 1997ஆம் ஆண்டு பூமியிலிருந்து அனுப்பப்பட்டது 'கஸினி' ( Cassini ) விண்கலம்.

இந்த விண்கலத்தின் வாயிலாக சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்து தொகுக்கப்பட்ட ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இம்முறை, சனி கிரகத்தின் ஐந்தாவது மிகப்பெரிய நிலவான 'என்க்லேடஸ்' ( Enceladus ) நிலவின் மீது ஆய்வின் கவனம் விழுந்தது.



                                                  ( நன்றி : 'தி ஹிந்து' நாளிதழ் )

என்க்லேடஸின் மேற்பரப்பு பனித்தகடால் மூடப்பட்டது என்பது முன்னதாகக் கண்டறிந்தது. கஸினி கலம் இந்நிலவை மூன்று முறை கடந்து சென்ற பொழுது, அதன் புவியீர்ப்பு சக்தியின் தாக்கத்தால், இக்கலத்தின் பாதையில் பல மாறுதல்கள் ஏற்பட்டது. இந்த புவியீர்ப்பு வேறுபாடுகளை ஆய்வு செய்ததில்,  என்க்லேடஸின் பனிக்கட்டி மேற்பரப்பின் அடிப்பகுதி பணியை விட அடர்த்தியான அமைப்பை கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும், இவ்வமைப்பு திரவ நிலை கொண்டிருக்கும் சாத்தியமும் எழுந்துள்ளது. அவ்வாறு, நீர் நிலை இருக்கும் பட்சத்தில், அது பூமியில் காணப்படும் சமுத்திரங்களைப் போல் பறந்து விரிந்து இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு  நீர் முதன்மையான தேவையாகும். எனவே, நீர் கண்டுபிடிக்கப்படுவது உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறியாக கொள்ளலாம். ஆகையால், என்க்லேடஸில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அங்கு நுண்ணுயிர்கள் கண்டறிவதற்கான சாத்தியம் பன்மடங்கு பிரகாசமாகும். உறுதி செய்வதற்கு, கஸினி விண்கலம் எதிர்காலத்தில் மீண்டும் பல முறை என்க்லேடஸை கடந்து சென்று தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வியாழன் மற்றும் சனி கிரகங்களின் பல்வேறு நிலவுகளில் நீர் நிலை இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும், பூமியைத்தவிர வேறு எந்த கோளிலோ, நிலவிலோ, நீர் இருப்பது இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியின் ஆங்கிலப் பதிப்பைபடிக்க: 
தி ஹிந்து நாளிதழ்
பாப்புலர் சையன்ஸ் வலைத்தளம்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 பி செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 பி செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது இந்திய விஞ்ஞானிகள் சாதனை 

 

 தொடர்ந்து படியுங்கள்...

(நன்றி : தினத்தந்தி)