குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

சனி, 24 ஆகஸ்ட், 2013

இந்தியா பங்கு கொள்ளும் உலகளாவிய வானியல் ஆராய்ச்சி

          நமது பிரபஞ்சம் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதாக விஞ்ஞானம் கணக்கிடுகிறது. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் ஓர் விளைவு, இன்று நாம் பூமி என்று அளைக்கும் கோள். நாம் அறிந்த  பிரபஞ்ச மண்டலத்தில், உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழளை கொண்ட ஒரே இடமான, நமது பூமியில் இருந்து, மனித இனத்தைச் சார்ந்த நாம், பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றி அறிய முயல்கிறோம்.
இந்த முயற்சி பல்லாயிர வருடங்களாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அம்முயற்ச்சியில் அடுத்த படியாக, 2005 ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட, Murchison Widefield Array என்ற செயல் திட்டமாகும்.

Murchison Widefield Array
 இந்த திட்டத்தின் சில முக்கிய தகவல்களைக் காண்போம்:

·         இத்திட்டம், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சி மையங்களோடு ஒருங்கிணைந்து செயல்படுவது இந்தியாவின், இராமன் ஆராய்ச்சி மையம்.
·         300 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட இந்த தொலைநோக்குக் கருவி, ஆஸ்திரேலியாவின் பேர்த் (Perth) நகரிலிருந்து 800 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது.
·         இக்கருவி 2048 இருதுருவ அலை-உணர் கம்பங்களைக் (Dipole Antennas) கொண்டுள்ளது. இக்கம்பங்கள் உணரும் மின்காந்த அலைளை, டிஜிட்டல் மயமாக்கி, ஆய்வுக்காக சக்தி வாய்ந்த கணினிக்கு அனுப்பப்படுகிறது.



·         கம்பங்களை வடிவமைப்பு மற்றும் உருவாக்கும் செயலில், இராமன் ஆராயச்சி மையத்திற்கு முக்கிய பங்குண்டு.  இந்த கருவிக்கு அவசியமான அதி வேக டிஜிட்டல் மின்னணுவியல் மீதான தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் இந்த மையம் முன்னோடியாக விளங்குகிறது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, பிரயன் ஷ்மிட் ( Brian Schmidt ) சிறப்பித்துள்ளார்.


இந்த செய்தி, 23 ஆகஸ்ட் 2013 ‘தி இந்து’ பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையின் பின்னணியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை இனி வரும் பூக்களில் காணலாம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக