குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பிரபஞ்சத்தின் வானவில்


கருமேகங்கள் நீல வானை சூழ்கின்றன, சூரியன், மழை மேகங்களால் முழுமையாக மூடப்படும் வேளை. அப்பொழுது ஒளிக்கதிர்கள் மேகங்களிள் தங்கி இருக்கும் மழை நீர் துளிகளால் சிதரடிக்கப்பட்டு, பல வர்ணங்கள் நிறைந்த வானவில்லாக தோற்றமளிக்கிறது. இந்த காட்சியை கண்டு நெகிழ, இரு கண்கள் போதுமோ? என்று கவி பாடி மகிழ்ந்துள்ளனர். சூரிய ஒளியைப் போன்று வெள்ளை ஒளியின் பகுப்புகளே வர்ணங்கள் என்று ஐஸக் நியூடன் (Issac Newton) கண்டறிந்தார். எப்படி வர்ணங்கள், ஒளியின் பல பிரிவுகளோ, ஒளியும் மாபெரும் பிரிவுகளுள் ஒன்று. அப்பிரிவுகள் அனைத்தும் மின்காந்த அலைகள் என்று அளைக்கப்படுகின்றன. இவ்வகை அலைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தால் அதனை இப்பிரபஞ்சத்தின் வானவில் என்று கூட கற்பனை செய்து கொள்ளலாம். இயற்பியலில், இதற்கு மின்காந்த அலைக்கற்றை (Electromagnetic Spectrum) என்று பெயருள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி, செயற்கைக்கோள் போன்ற கருவிகளில் தொலைதொடர்பை சாத்தியமாக்கும் வானொலி அலைகள் (Radio Waves), நம் காதுகள் உணரக்கூடிய ஒலி அலைகள் (Audio Waves), சமையலரையில் உபயோகிக்கப்படும் மைக்ரோவேவ் அடுப்பு வெளியேற்றும் நுண்ணலைகள் (Microwaves), வெப்பநிலை கண்காணிக்கும் கேமரா உபயோகிகும் அகச்சிவப்புக் கதிர்கள் (Infra-red radiation), ஒளிக்கதிர்கள் (Visible radiation) (அதில் அடங்கும் வண்ணங்கள்), தண்ணீரை சுத்தீகரிக்கப் பயன்படுத்தப் படும் புற ஊதா கதிர்கள் (Ultra-violet radiation), எலும்பு முரிவு கண்டறிய பயன்படுத்தப்படும் ஊடு கதிர்கள் (X-radiation), அணு உலையிலிருந்து வெளிப்படும் காம்மா* (Gamma radiation) கதிர்கள், இவையனைத்தும் மின்காந்த அலைக்கற்றையின் கீழ் அடங்கும்.

Source : Wikipedia

காலையில் நீலமாக தோற்றமளிக்கும் ஆகாயம், மாலையில் சிவந்து காணப்படுகிறது. (ஏன் என்று தெரியுமா?). இவ்வாறு நாம் காணும் வானவில்லின் வண்ணங்கள் மாறுபடுவது போல், மின்காந்த அலைகளும் ஒன்று இன்னொன்றாக மாற முடியுமா? உண்மையில், இதைப் போல் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், இந்த மாறுதலே, நம் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைப் நாம் அறிந்து கொள்ள இணையற்ற தடையமாகவும் விளங்குகிறது. எவ்வாறு என்று தொடர்ந்து காணலாம்...


* ’காமா’ என்ற வார்த்தையில் வரும் ‘கா’, ‘காந்தி’யில் ( Gandhi ) உச்சரிக்கப்படுவது போல் உச்சரிக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக