குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

பெரு வெடிப்பு கோட்பாடு - Big Bang Theory


          நமது பிரபஞ்சத்தின் உருவாக்கத்தை விளக்க முயலும் கோட்பாடுகளுள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதும், பிரபலம் வாய்ந்ததும் ஆனது ‘Big Bang‘ கோட்பாடு. இதனைத் தமிழில், ‘பெருவெடிப்புக் கோட்பாடு’ என்று மொழி பெயர்க்கப்படுகிறது ( பெரு வெடிப்பு கோட்பாடு in Wikipedia ). இந்த கோட்பாட்டை விவரிப்பதற்க்கு முன், ஓர் சிறிய முன்குறிப்பைக் காண்போம்.

அறிவியல் வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் பள்ளியில் கற்ற, அணுவமைப்பு ( Atomic Structure ) முதல் பிரபஞ்ச உருவாக்கம் வரை, பல்வேறு கோட்பாடுகள், எண்ணற்ற மாறுதல்களையும், மேம்பாடுகளையும் சந்தித்துள்ளது. இந்த வேகத்திற்கு, நாம் அன்றாடு உபயோகிக்கும் மொழியானது, ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தற்போதய அறிவியல் கோட்பாடுகள், கற்பனைக்கு எட்டாத சுவாரசியமான சாத்தியங்களை அளிக்கின்றன.இவற்றை பேச்சுவழக்கு மொழியை உபயோகித்து, எளிதில் புரியக்கூடிய வகையில் விளக்குவது என்பது கடினமான சவாலாகும்.


அவ்வழியே, பெருவெடிப்பு கோட்பாட்டை விளக்குவதும், ஓர் சவால் என்றுதான் கூற வேண்டும். இக்கோட்பாட்டின் பெயரைக்கொண்டே, இதனை தவறாக புரிந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், ‘பெரு வெடிப்பு’ என்று இதனை அளைத்தாலும், பிரபஞ்சம் ஆரம்ப தருணத்தில், பெரிது-சிறிது என்று அளவு பார்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ‘இடம்’ என்பதே கிடையாது. அடுத்து, ‘வெடிப்பு’ என்ற சொல். இந்த சொல்லைப் படித்த உடன், தீபாவளி பட்டாசு தான் நம் கண் முன்னே தோன்றும். ஆனால், ‘பெரு வெடிப்பு’ நடந்த பொழுதோ, பட்டாசு வெடித்தாற்போல், நம்மால் பார்க்கக்கூடிய வெளிச்சமோ, கேட்கக்கூடிய சத்தமோ, ஏற்படவில்லை. அச்சோ..!, சற்று பொறுங்கள், நான் தெரியாமல், ‘பொழுது’ என்ற வார்த்தையை உபயோகித்து விட்டேன். பிரபஞ்ச ஆரம்பம் தான், பொழுதின் ஆரம்பம் ( Beginning of Time ) என்பது தற்போது நிலவும் கருத்து. என்ன? தலை சுற்றுகிறதா? இந்த தலை சுற்றுதலுக்கு இடையே தான், உலக விஞ்ஞானிள், பல கேள்விகளுக்கு, பதில் தேடி போராடி வருகின்றனர். மேலும் இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், காலம் மற்றும் இடம் ( Space and Time ) இல்லாத, அறிவாற்றலுக்கு புலப்படாத ஓர் நிலையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக