குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

வியாழன், 5 ஜூன், 2014

ஐ.ஐ.டி. மெட்ராஸின் 41ஆம் முத்தமிழ் மன்ற விழா - ஒரு பார்வை.

இந்திய  தொழில் நுட்பக்கழகத்தின் நாற்பத்தி ஒன்றாவது முத்தமிழ் மன்ற விழா நேற்று ( ஜூன் 4, 2014 ), மத்திய விரிவுரை அரங்கில் நடைப்பெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, 'அம்புலி பர்வம்' கீழ் கண்ட பிள்ளைத்தமிழ் பாசுர வரிகளை பாடி இலக்கிய சுவை சேர்த்தார் மன்றத்தின் ஆலோசகர் திரு. ஜி. நாராயணன். பின்னர், இசைச் சுவைக்கு குறை இல்லாதபடி, ஐ. ஐ. டி.யில் பயிலும் கல்வியாளர்கள், பிரபல திரை பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடினர். பிற மொழியினரையும் வரவேற்கும் வகையில், பிற மொழி பாடல்கள் பாடுபவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. அனால், அச்சமயத்தில் தமிழ் மன்ற நிகழ்ச்சியை காண, அரங்குக்குள் வந்தவர்க்கு, பிற மொழி பாடல் ஒலிப்பதை கேட்க கொஞ்சம் புதிராக இருந்திருக்கும் ! கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றபின், மன்ற விழாவை தலைமை தாங்கிய  ஐ. ஐ. டி. மெட்ராஸின் கணித பேராசிரியர் திரு. சுந்தர் அவர்களை கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து பெருமை செயப்பட்டது.  பின்னர், தமிழ் மன்ற இதழான முத்தமிழ் முரசை இவர் வெளியிட்டதோடு, இவ்விதழில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகளை, இதழின் ஆசிரியர் திரு. சுதர்சன் பத்மநாபன் எடுத்துக் காட்டினார்.


முத்தமிழ் விழாவில் மேடையில் அமர்ந்திருக்கும் திரு. கண்ணன், முனைவர் அருண் நரசிம்மன் மற்றும்  முனைவர் சுந்தர்.


தமிழ் மொழியில் படிப்பவர் மனம் கவரும் வகையிலும் புரியும் வகையிலும் அறிவியல் புத்தகங்கள் எழுதி வெளியிடுவது எளிதான செயல் அன்று. எனினும் அத்தகைய முயற்ச்சியில் இறங்கி, தமிழினி பதிப்பகம் துணையுடன், மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார் ஐ.ஐ.டி.யை  சேர்ந்த முனைவர் அருண் நரசிம்மன். இவர், 'நேனோ ஓர் அறிமுகம்', 'ஏலியன்கள் இருக்கிறார்களா?', 'டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?' என்ற சுவாரசியமான தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் எழுதியுள்ளார்.  இவரது இயற்புரையிலிருந்து, சில மேற்கோள்களை காண்போம். எழுத்தார்வம் இருந்திருந்தும், தமிழில் எழுதத் தொடங்கியது தற்செயலாகவே நடந்ததது என்றும், ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தமிழ் படிக்கக் கஷ்டப்பட்ட நிலையை கண்டது, தமிழில் எழுத தூண்டுதலாக அமைந்தது என்றும் கூறினார். தனது இணைய தளத்தில் (http://www.ommachi.net/) பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி வரும் இவர், "இன்னும் இருபது வருடங்களில், தமிழில் ஆயிரம் கட்டுரைகள் எழுதி விட வேண்டும்:, என்று உற்சாகத்துடன் தெரிவித்தார். அறிவியல் சார்ந்த சொற்களை தமிழாக்கம் செய்வது, படிப்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று கருதியதால், சில ஆங்கில வார்த்தைகள் அப்படியே தமிழில், தனது புத்தகங்களில். எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் (எ. கா. Nano - நேனோ, Electron - எலக்ட்ரான் ). ஆனாலும், சில வார்த்தைகள் தமிழில் மொழிப்பெயர்த்த பின், அழகாக பொருள் விளக்குவதாக அமைந்ததால், அவை மொழிப்பெயர்ப்பு செயப்பட்டது என்றும் கூறினார் (எ. கா. Touch Screen - தொடு திரை, Thermocouple - வெப்பமின்னிரட்டி ).  எட்டாம் வகுப்பு வரை தமிழ் படித்தவர் கூட படிக்ககூடிய எளிய நடையில் எழுதியுள்ளதாக  குறிப்பிட்ட அவர், தனது புத்தகங்களில் இருந்து, சில பகுதிகளை பார்வையாளர்களுக்கு சுட்டிக் காட்டினார். புத்தகங்களை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழினி பதிபகத்தின் திரு. வசந்த குமாரை பாராட்டினார். கரகோஷத்தின் மத்தில் பேச்சு முடிவுற்ற பின்னர், அவருக்கு விழா தலைவர் பாராட்டி சிறப்பு செய்தார்.

திருக்குறளின் வாயிலாக, பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தலைமைப் பண்புகள் வளர்க்கும் நோக்கத்துடன் பயிற்சி அளித்து வரும் திரு. கண்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். திருக்குறளின் கருத்துகள் மொழியின் வரையறைகள் தாண்டியது என்பதை உணர்த்தும் வகையில், பல சிந்தனை தூண்டும் கதைகளுடனும், உதாரணங்களுடனும் அவர் பேசினார். இவரது இணைய தளமும் (http://www.seer7.com/), திருக்குறள் உலகெங்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ளது.

இனி வரும் மன்ற விழாவில், ஓர் கருத்தரங்கம் ஏற்பாடு செய்வது பற்றி பரிந்துரைகள் நடைபெற்று வருகிறது என்ற செய்தியுடன், விழா இனிதே முடிவடைந்தது.

மேல் குறிப்புட்டுள்ள தமிழ் புத்தகங்களை வாங்க விரும்புவோர், முனைவர் அருண் நரசிம்மன் அவர்களின் வலைப்பக்கத்தில்  இடம் பெற்றுள்ள விவரங்களை அணுகலாம்.              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக