அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்று, இணையதள தொழில்நுட்பங்கள் உருவாக்கும் கூகிள் ( Google ) நிறுவனம். இந்த வாரம், இந்நிறுவனத்தின் இணை-நிறுவனரான செர்கி பிரின் ( Sergey Brin ), சுய-ஓட்டி கார்களை தயாரிக்கும் பணிகளில் கூகிள் ஈடுபட்டுள்ளது என்று அறிவித்தார். இது வரை, டொயோடா, லெக்சஸ் போன்ற பிற உற்பத்தியாளர்களின் கார்களை மாறுபடுத்தி, ஓட்டுனர் இன்றி இயக்கி வந்தது கூகிள். சுய-ஓட்டி தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காரின் வடிவமைப்பு பற்றிய விவரங்களையும் கூகிள் வெளியிட்டது. மின் சக்தியில் செயல்படும் இந்த கார், பாதுகாப்பு கருதி அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு இருபத்தைந்து மைல்கள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
 |
| கூகிள் தயாரிக்கும் சுய-ஓட்டி கார் ( நன்றி : பி.பி.சி. ) |
மேலும், காரை கட்டுபடுத்த, ஸ்டீயரிங் வீல், கியர் பாக்ஸ் என்று எதுவும் கிடையாது - வெறும் செல்/நில் பட்டன்கள் மட்டுமே ! சாலை விபத்துகளை முற்றிலுமாக தவிர்க்கக் கூடிய வல்லமை படித்திருந்தாலும், சுய-ஓட்டு தொழில்நுட்பம் இன்னும் கூட்ட நெரிசல் மிக்க நகர சாலைகளில் அதன் திறன் முழுமையாக இது வரை சோதனை செய்யப் படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக