தட்பவெப்பநிலை
மாற்றத்திற்கான அரசிடைக்குழு – Intergovernmental Panel on Climate Change (IPCC) ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, பூமியில்
தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவுகளையும்,
கணிப்புகளையும் அடங்கிய ஓர் விரிவான அறிக்கையை வெளியிடுகிறது. 2007ஆம் ஆண்டு
வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து, இவ்வாண்டு இம்மாத இறுதியில் தனது ஐந்தாவது
அறிக்கையை வெளியிட உள்ளது.
இந்த அறிக்கையின்
இறுதி வரைவு நகலில் காணப்படும் சில முக்கிய புள்ளிகளை பல்வேறு பத்திரிக்கைகளில்
சென்ற வாரம் வெளியிடப்பட்ட்து அவை, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1951 முதல் 2012
வரை, புவி வெப்பமடைதலின் விகிதம், பத்தாண்டுக்கு 0.12°C என்று அளவிடப்பட்டது. ஆனால், கடந்த பதினைந்து
ஆண்டுகளில் (1998 முதல் 2012 வரை), இந்த விகிதம், பத்தாண்டுக்கு 0.05°C என்று குறைந்தே அளவிடப்பட்டுள்ளது. அதாவது,
இந்த பதினைந்து ஆண்டு காலகட்டத்தில் புவி வெப்பமடைதலின் விகிதம், நீண்ட கால விகித
அளவினைக் காட்டிலும் நாற்பது சதவிகிதம் குறைந்துள்ளது.
மேலும், இந்த
நூற்றாண்டு முடிவடையும் வேளையில், உலக சராசரி வெப்ப நிலை, தொழிற்சாலைகள்
தொடங்குதலுக்கு முன் நிலவிய வெப்ப நிலை காட்டிலும், 1.5°C உயர அதிக வாய்ப்பு
இருப்பதாகவும், 2°C
க்கு மேல் உயர, குறைந்த வாய்ப்பு இருப்பதாகவும், 4°C க்கு மேல் உயர மிகக் குறைந்த
வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வறிக்கையில் கணிக்கப்பட்டதாக
இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில்,
கறியமில வாயு அளவு அதிகரிப்பதனால் சுற்றுபுறத்தின் மீதான பாதிப்பு பற்றியும்
குறிப்பிட்டுள்ளது. இந்த பாதிப்பை அளவிட,
கறியமில வாயு அளவு இரட்டிப்பாகயின், பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பு
கணிக்கப்படுகிறது. முன்னர், இக்குழு வெளியிட்ட அறிக்கைகள் படி, வெப்ப நிலை
அதிகரிப்பு 2°C முதல் 4.5°C வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப் பட்டது.
ஆனால், தற்போது வெளியிடப் பட உள்ள அறிக்கையிலோ, கறியமில வாயு அளவு இரட்டித்தால் இந்த
அதிகரிப்பு 1.5°C மட்டுமே இருக்கக்கூடும்
என்று குறைந்து கணிக்கப் பட்டுள்ளது.
தட்பவெப்பநிலை
மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையை கொண்டே, தட்பவெப்பநிலை மாற்றம் சார்ந்த
உலக நாடுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை முடிவெடுக்கப்படும்.
இந்த
அறிக்கையில் வெளியிடப்பட உள்ள, தட்பவெப்ப நிலை மாற்றம் முன்பு கணித்தாற் போல், வேகமாக
அதிகரிக்கவில்லை என்ற தகவல், இனி வரும் நாட்களில், மிகுந்த விவாதங்களுக்கும்,
விளக்கங்களுக்கும் ஓர் பொருட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக