குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

வியாழன், 12 செப்டம்பர், 2013

இந்தியாவின் பார்வையில் செவ்வாய் - India's Mars Mission

           ஏறத்தாழ  40 கோடி கி.மீ. தூர பயணம்; இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இன்னொரு மைல்கல்; விண்வெளி ஆராச்சியின் வளர்ச்சிக்கு ஓர் தூண்டுகோல் – இவ்வாறு இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வு (Mass Orbiter Mission) பயணத்தை வர்ணித்துக் கொண்டே போகலாம். இன்னும் ஒரு மாத காலத்தில், இந்த ஆய்வை மேற்கொள்ளும் விண்கலம், விண்ணில் ஏவும் தயார் நிலையை அடைந்துள்ளது. 

          1350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தை அடைய ஒன்பது மாதங்கள் எடுத்துக்கொண்டு, அதன்பின் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சுற்றி வரும். இந்த விண்கலம் அக்டோபர் 21 முதல் நவம்பர் 19 வரை உள்ள இடைப்பட்ட நாட்களில் ஸ்ரீஹரிகோட்டா நிலையத்திலிருந்து புறப்படும் என்று இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் இரசாயன தன்மையை பற்றி ஆராய, ஐந்து வகையான கருவிகள், இக்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றுள், உயிரைத் தாங்கும் திறன் கொண்ட மீத்தேன் (Methane) வாயு இருப்பதை கண்டறியும் கருவியும் ஒன்று.

Source : The Hindu

         அதிக சக்தி பெற்ற GSLV ஏவுகணைகள் தயார் நிலையில் இல்லாததால், எடையிலும், சக்தியிலும் குறுகிய PSLV ஏவுகணைகளை உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆய்வின் இயக்குனர் ச.அருணன் கூறியுள்ளார். இதனால், இயல்பாக செவ்வாய் திசை நோக்கி ஓர் கலனை அனுப்ப எடுக்கும் ஓரு நாள் கால அளவு அல்லாது, தற்போதைய கலனை சரியான பாதையில் அனுப்ப 20 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்று அவர் குறுப்பிட்டார். இந்த இருபது நாட்களில், விண்கலம் ஆறு முறை பூமியை சுற்றி வருவதோடு, அதன் புவியீர்ப்பு சக்தியையே தனக்கு தேவையான உந்து சக்தியாய் உபயோகித்துக் கொண்டு, தனது 9-மாத பயணத்தை தொடங்கும்.

      450 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு வெற்றிகரமானால், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, செவ்வாய்க்கு கலம் அனுப்பிய உலகின் நான்காவது ஆராய்ச்சி மையம் என்ற சிறப்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக